search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கள்ளக்காதலி பலி"

    திருவோணம் அருகே தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்- கள்ளக்காதலி பலியாகினர்.

    திருவோணம்:

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோமதிராஜன் (வயது 36). இவர் திருப்பூரில் உள்ளி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அருகே கே.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் ஏஜினஸ்(37). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், சங்கவி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    கோமதிராஜனுடன் ஏஜினசும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதனால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து வாழ்ந்த ஏஜினஸ், கோமதிராஜனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கோமதிராஜன், தனது கள்ளக் காதலி ஏஜினசை அழைத்து கொண்டு பட்டுக்கோட்டையில் நடக்கும் நண்பர் ஒருவரது வீட்டு திருமணத்திற்காக திருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருவோணம் அருகே உள்ள வேப்பங்காடு இடத்தில் இன்று காலை சென்றபோது அந்த வழியே வேகமாக சென்ற ஒரு தனியார் பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி சென்று இருவரையும் மீட்க முயன்றனர்.

    ஆனால் விபத்தில் கோமதிராஜனும், ஏஜினசும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது.

    பின்னர் இதுபற்றி திருவோணம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., செங்கமலக்கண்ணன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய வெள்ளாளர் விடுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் முத்துவை(32) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தனியார் பஸ் மோதி கள்ளக்காதலியுடன் வாலிபர் பலியான சம்பவம் திருவோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×